
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் திட்ட இயக்குநராகப் பணிபுரிந்து வருபவர் இலக்குவன். இவர் கடந்த மாதம் களக்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ஆய்வுக்கு சென்றுள்ளார். அந்த அலுவலகத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் இளம்பெண்ணின் அறையில் ஆவணங்களை ஆய்வு செய்துள்ளார்.
அப்போது, அந்தப் பெண்ணின் குடும்ப சூழ்நிலை குறித்து விசாரித்த இலக்குவன், அவரது மேல் படிப்புக்கு உதவுவதாக கூறியுள்ளார். பின்னர், வேறொரு அறைக்கு அவரை அழைத்துச் சென்று, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்து அந்தப் பெண் வெளியேறியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2fH5PDg
0 Comments