Crime

திருநெல்வேலி: திருநெல்​வேலி மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் மகளிர் திட்ட இயக்​குந​ராகப் பணிபுரிந்து வருபவர் இலக்​கு​வன். இவர் கடந்த மாதம் களக்​காடு ஊராட்சி ஒன்​றிய அலு​வல​கத்​துக்கு ஆய்​வுக்கு சென்​றுள்​ளார். அந்த அலு​வல​கத்​தில் தொகுப்பூதியத்தில் பணிபுரி​யும் இளம்​பெண்​ணின் அறை​யில் ஆவணங்​களை ஆய்வு செய்​துள்​ளார்.

அப்​போது, அந்​தப் பெண்​ணின் குடும்ப சூழ்​நிலை குறித்து விசா​ரித்த இலக்​கு​வன், அவரது மேல் படிப்​புக்கு உதவுவ​தாக கூறியுள்ளார். பின்​னர், வேறொரு அறைக்கு அவரை அழைத்​துச் சென்​று, பாலியல் ரீதி​யாக தொல்லை கொடுத்​த​தாக கூறப்படுகிறது. உடனடி​யாக அங்​கிருந்து அந்​தப் பெண் வெளி​யேறி​யுள்​ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2fH5PDg

Post a Comment

0 Comments