Crime

உடுமலை / திருப்பூர்: திருப்​பூர் மாவட்​டம் உடுமலை அருகே காவல் சிறப்பு உதவி ஆய்​வாளரை வெட்​டிக் கொன்ற வழக்​கில் தொடர்​புடைய குற்​ற​வாளியை போலீ​ஸார் நேற்று என்​க​வுன்ட்​டரில் சுட்​டுக் கொன்​றனர்.

சிக்​க​னூத்து பகு​தி​யில் மடத்​துக்​குளம் அதி​முக எம்​எல்ஏ மகேந்​திரனுக்​குச் சொந்​த​மான தென்​னந்​தோப்பு உள்​ளது. அங்கு திண்​டுக்​கல் மாவட்​டம் வேடசந்​தூரைச் சேர்ந்த மூர்த்​தி(62), அவரது மகன் தங்​க​பாண்​டி(30) மற்​றும் குடும்​பத்​தினர் தங்​கி​யிருந்து பணி​யாற்றி வந்​தனர். கடந்த 5-ம் தேதி இரவு மூர்த்​தியை பார்க்க அவரது மற்​றொரு மகன் மணி​கண்​டன்​(32), தனது குடும்​பத்​துடன் வந்​துள்​ளார். அப்​போது மூர்த்​தி, மகன்​கள் தங்​க​பாண்​டி, மணி​கண்​டன் ஆகியோர் மது அருந்​தி​யுள்​ளனர். திடீரென அவர்​களிடையே தகராறு ஏற்​பட்​டுள்​ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RvPx1y4

Post a Comment

0 Comments