
உடுமலை / திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை வெட்டிக் கொன்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை போலீஸார் நேற்று என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
சிக்கனூத்து பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. அங்கு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த மூர்த்தி(62), அவரது மகன் தங்கபாண்டி(30) மற்றும் குடும்பத்தினர் தங்கியிருந்து பணியாற்றி வந்தனர். கடந்த 5-ம் தேதி இரவு மூர்த்தியை பார்க்க அவரது மற்றொரு மகன் மணிகண்டன்(32), தனது குடும்பத்துடன் வந்துள்ளார். அப்போது மூர்த்தி, மகன்கள் தங்கபாண்டி, மணிகண்டன் ஆகியோர் மது அருந்தியுள்ளனர். திடீரென அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RvPx1y4
0 Comments