
பொழிச்சலூர்: பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர், ஞானமணி நகரை சேர்ந்தவர் அருண் (44). இவர் தனது மனைவி வனஜா (38) மற்றும் மகன்களுடன் சொந்த வீட்டில் வசித்து வருகிறார். மாற்றுத் திறனாளியான அருண், பெயிண்டிங் டிசைனர் ஆக பணிபுரிந்து வந்த நிலையில், அவரது மனைவி வனஜா இல்லத்தரசியாக இருந்து வந்தார்.
அருண் குடும்ப செலவுக்காக கொடுக்கும் பணத்தில் சிறிது சிறிதாக ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் வனஜா முதலீடு செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அளவுக்கு அதிகமாக ஆன்லைனில் முதலீடு செய்ய விரும்பிய வனஜா, மகளிர் சுய உதவிக் குழுக்களில் கடன் பெற்று அந்த பணத்தையும் ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யத் தொடங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OFL3qva
0 Comments