
புதுக்கோட்டை: ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்கக் கோரி விராலிமலை முருகன் கோயிலில் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவர் தவறி விழுந்து உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள கொடும்பாளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(43).
சமூக ஆர்வலரான இவர், விராலிமலையில் மலை மீதுள்ள முருகன் கோயிலில் 70 அடி உயரமுள்ள கோபுரத்தில் ஏறி, கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும், மயில்கள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தேசியக் கொடியுடன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vPx1WcJ
0 Comments