Crime

புதுக்கோட்டை: ஆக்​கிரமிப்​பில் உள்ள கோயில் நிலங்​களை மீட்​கக் கோரி விராலிமலை முரு​கன் கோயி​லில் கோபுரத்​தில் ஏறி போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​வர் தவறி விழுந்து உயிரிழந்​தார். புதுக்​கோட்டை மாவட்​டம் விராலிமலை அரு​கே​யுள்ள கொடும்​பாளூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் ஆறு​முகம்​(43).

சமூக ஆர்​வல​ரான இவர், விராலிமலை​யில் மலை மீதுள்ள முரு​கன் கோயி​லில் 70 அடி உயர​முள்ள கோபுரத்​தில் ஏறி, கோயிலுக்​குச் சொந்​த​மான நிலங்​களை ஆக்​கிரமிப்​பில் இருந்து மீட்க வேண்​டும், மயில்​கள் சரணால​யம் அமைக்க வேண்​டும் என்று வலி​யுறுத்​தி, தேசி​யக் கொடி​யுடன் நேற்று போராட்​டத்​தில் ஈடு​பட்​டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vPx1WcJ

Post a Comment

0 Comments