Crime

விருத்தாசலம்: பண்ருட்டி அருகே அரசு மருத் துவர் வீட்டில் 158 பவுன் நகைகள் கொள்ளை வழக்கில் மேலும் 6 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து மேலும் 20 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் புது பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (45). அரசு மருத்துவராக பணியாற்றி வரு கிறார். இவரது வீட்டிலிருந்த 158 பவுன் நகைகள் ஜூலை 24-ம் தேதி கொள்ளை போனது. இச்சம்பவம் தொடர்பாக கடலூர் எஸ்பி ஜெயக்குமார், பண்ருட்டி டிஎஸ்பி ராஜா தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uAnoLx0

Post a Comment

0 Comments