Crime

விருத்தாசலம்/திருச்சி: விருத்தாசலம் அருகே நேற்று தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ரயில்வே கிராஸிங்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 மாணவர்கள் லேசான காயமடைந்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வேன் ஒன்று மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

விருத்தாசலம் - உளுந்தூர் பேட்டை இடையே கோ.பூவனூர் என்ற இடத்தில் ரயில்வே கிராஸிங்கை கடக்க முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தவேன், தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் துரிதமாகச் செயல்பட்டு வேனில் இருந்த மாணவர்களை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புற சிகிச்சையாக மருத்துவம் பெற்ற மாணவர்கள் வீடு திரும்பினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/b8MwTWa

Post a Comment

0 Comments