
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள் அதனை கடத்தி வந்த நைஜீரிய நாட்டு இளம் பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களை சுங்க துறை அதிகாரிகள் கடந்த 23-ம் தேதி அதிகாலை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது, கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து, கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று, சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை பரிசோதனை செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KjN1Q4b
0 Comments