
கோவை: கோவை வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,875 கிலோ ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்த போலீஸார், ஒருவரைக் கைது செய்தனர். கோவை மாவட்டம் பாலக்காடு வழியாக கேரளாவுக்கு வெடிபொருள் கடத்தப்படுவதாக போலீஸுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கோவை எஸ்.பி. கார்த்திகேயன் உத்தரவின் பேரில், ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான மதுக்கரை போலீஸார் மற்றும் கோவை மண்டல தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று அதிகாலை மதுக்கரை எல் அண்டு டி புறவழிச் சாலையில் உள்ள மரப்பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jfbyZrI
0 Comments