Crime

சென்னை: வன்முறையை தூண்டும் வகையில் ரீல்ஸ்கள் வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் எச்சரித்துள்ளார்.

சமூக வலைதளங்களான வாட்ஸ்-அப், பேஸ் ஃபுக், ட்விட்டர் (எக்ஸ்) போன்றவற்றை விட இன்ஸ்டா கிராம் அதிக பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டுள்ளன. இதில், பலர் தங்களது நிறைமைகளை நிரூபிக்கும் வகையில் நடித்து வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், பல வீடியோக்கள் எல்லை மீறுவதால் எதிர்ப்புகளையும் எதிர்கொள்கிறது. குறிப்பாக அண்மை காலமாக குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை பெருமைபடுத்தும் வகையிலும், ஊக்கப்படுத்தும் வகையிலும் ரீல்ஸ்கள் வெளியாகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KOMcFDE

Post a Comment

0 Comments