
சென்னை: காதல் திருமணத்தை கொண்டாடும் வகையில் ஓட்டலில் நடந்த கஞ்சா விருந்து தொடர்பாக நடிகர், வழக்கறிஞர்உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள பிரபலமான ஓட்டலில் கஞ்சா விருந்து நடப்பதாக பட்டினப்பாக்கம் காவல் நிலைய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்குள் போலீஸார் திடீரென நுழைந்து அறைகளைப் பார்வையிட்டனர். அப்போது ஓர் அறையில் இளைஞர்கள் கும்பலாக ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சினிமா பாடல்களை ஒலிக்கவிட்டு நடனமும் ஆடிக் கொண்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BIZPszV
0 Comments