Crime

சென்னை: ​காதல் திரு​மணத்தை கொண்​டாடும் வகை​யில் ஓட்​டலில் நடந்த கஞ்சா விருந்து தொடர்​பாக நடிகர், வழக்​கறிஞர்உட்பட 10 பேர் கைது செய்​யப்​பட்​டனர். சென்னை எம்​ஆர்சி நகரில் உள்ள பிரபல​மான ஓட்​டலில் கஞ்சா விருந்து நடப்​ப​தாக பட்டினப்பாக்கம் காவல் நிலைய போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது.

இதையடுத்​து, நேற்று முன்​தினம் சம்​பந்​தப்​பட்ட ஓட்​டலுக்​குள் போலீ​ஸார் திடீரென நுழைந்து அறை​களைப் பார்​வை​யிட்​டனர். அப்​போது ஓர் அறை​யில் இளைஞர்​கள் கும்​பலாக ஆட்​டம், பாட்​டம், கொண்​டாட்​டத்​தில் ஈடு​பட்​டிருந்​தனர். சினிமா பாடல்​களை ஒலிக்​க​விட்டு நடன​மும் ஆடிக் கொண்​டிருந்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BIZPszV

Post a Comment

0 Comments