Crime

திருவாரூர்: திருவாரூர் அருகே அரசுப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது தெரியவந்தது. மதுபோதையில் இச்செயலில் ஈடுபட்ட 3 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் அடுத்த காரியாங்குடி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் காரியாங்குடி, நெம்மேலி, இளங்கச்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 31 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். காலை உணவு திட்டத்துக்கு சமைப்பதற்காக சமையலர்கள் நேற்று பள்ளிக்கு சென்றபோது, சமையல் அறையில் இருந்த அலமாரி உடைக்கப்பட்டு, மளிகை பொருட்கள் சிதறி கிடந்தன. பள்ளி வளாகத்தில் இருந்த வாழை மரங்கள் வெட்டப்பட்டிருந்தன. தென்னை மரங்களில் இருந்த தேங்காய்கள் பறிக்கப்பட்டிருந்தன. பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியின் மூடி உடைக்கப்பட்டு, அந்த தொட்டியில் மனித கழிவு கலக்கப்
பட்டிருந்ததும் தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/A5dNRfg

Post a Comment

0 Comments