
சென்னை: பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவரது நண்பர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். வியாசர்பாடி, எம்கேபி நகர் அருகே உள்ள புதுநகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சித்ரா. இத் தம்பதிக்கு சங்கர் (19) என்ற மகனும், வனிதா (17) என்ற மகளும் இருந்தனர்.
சங்கர் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, பைக் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இந்நிலையில், சங்கர், நேற்றுமுன்தினம் தனது பிறந்தநாளை எருக்கஞ்சேரி சாலையில் தனது நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர், அனைவரும் மது அருந்தினர். அப்போது, அன்று காலை கால்பந்து விளையாடும் போது அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை சங்கர் தாக்கியது குறித்து அவரது நண்பர்கள் கேட்டனர். இதில் சங்கருக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZXzjgha
0 Comments