Crime

சென்னை: பிறந்​த​நாள் கொண்​டாட்​டத்​தின் போது, இளைஞர் வெட்டி கொலை செய்​யப்​பட்ட விவ​காரத்​தில், அவரது நண்​பர்​கள் 4 பேர் கைது செய்​யப்​பட்​டனர். வியாசர்​பாடி, எம்​கேபி நகர் அருகே உள்ள புதுநகர் 7-வது தெரு​வைச் சேர்ந்​தவர் குமார். இவரது மனைவி சித்​ரா. இத் தம்​ப​திக்கு சங்​கர் (19) என்ற மகனும், வனிதா (17) என்ற மகளும் இருந்​தனர்.

சங்​கர் கல்​லூரி படிப்பை பாதி​யில் நிறுத்​தி​விட்​டு, பைக் மெக்​கானிக்​காக வேலை செய்து வந்​தார். இந்​நிலை​யில், சங்​கர், நேற்​று​முன்​தினம் தனது பிறந்​த​நாளை எருக்​கஞ்​சேரி சாலை​யில் தனது நண்​பர்​களு​டன் கேக் வெட்டி கொண்​டாடி​னார். பின்​னர், அனை​வரும் மது அருந்​தினர். அப்​போது, அன்று காலை கால்​பந்து விளை​யாடும் போது அதே பகு​தி​யைச் சேர்ந்த ஒரு​வரை சங்​கர் தாக்​கியது குறித்து அவரது நண்​பர்​கள் கேட்​டனர். இதில் சங்​கருக்​கும், அவரது நண்​பர்​களுக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZXzjgha

Post a Comment

0 Comments