
நாமக்கல்/சென்னை: பள்ளிபாளையத்தில் கிட்னி விற்பனை புகாரைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் தானமாக சிறுநீரகத்தை வழங்கியவர்கள் மற்றும் பெற்றவர்களிடம் சிறப்புக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ஏழை, எளிய விசைத்தறி கூலித் தொழிலாளர்களை மூளைச்சலவை செய்து அவர்களது கிட்னியைத் தானமாக வழங்குவதாகக் கூறி சிலர் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.
மேலும், இதுதொடர்பான ஆடியோ, வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், இப்புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் டாக்டர் வினித் மற்றும் சுகாதாரத் துறை சட்டப்பிரிவு துணை இயக்குநர் மீனாட்சி சுந்தரேசன் ஆகியோர் கொண்ட சிறப்பு மருத்துவக் குழுவை அரசு அமைத்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1IQ9uNT
0 Comments