Crime

நாமக்கல்/சென்னை: பள்​ளி​பாளை​யத்​தில் கிட்னி விற்​பனை புகாரைத் தொடர்ந்​து, நாமக்​கல் மாவட்​டத்​தில் தான​மாக சிறுநீரகத்தை வழங்​கிய​வர்​கள் மற்​றும் பெற்​றவர்​களிடம் சிறப்​புக் குழு​வினர் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். நாமக்​கல் மாவட்​டம் பள்​ளி​பாளை​யத்​தில் ஏழை, எளிய விசைத்​தறி கூலித் தொழிலா​ளர்​களை மூளைச்​சலவை செய்து அவர்​களது கிட்​னியைத் தான​மாக வழங்​கு​வ​தாகக் கூறி சிலர் விற்​பனை செய்​வ​தாக புகார் எழுந்​தது.

மேலும், இதுதொடர்​பான ஆடியோ, வீடியோ பதிவு​கள் சமூக வலை​தளங்​களில் வைரலானது. இந்​நிலை​யில், இப்​பு​கார் தொடர்​பாக விசா​ரணை மேற்​கொள்ள தமிழ்​நாடு சுகா​தார திட்ட இயக்​குநர் டாக்​டர் வினித் மற்​றும் சுகா​தா​ரத் துறை சட்​டப்​பிரிவு துணை இயக்​குநர் மீனாட்சி சுந்​தரேசன் ஆகியோர் கொண்ட சிறப்பு மருத்​து​வக் குழுவை அரசு அமைத்​துள்​ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1IQ9uNT

Post a Comment

0 Comments