
திருவாரூர்: கேரளாவில் ரூ.3.24 கோடி வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒரு பாஜக நிர்வாகியை கேரள போலீஸார் நேற்று கைது செய்தனர். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காயங்குளம் என்ற இடத்தில் கடந்த ஜூன் 13-ம் தேதி ரூ.3.24 கோடி ரொக்கத்தை நகைக் கடை அதிபர் ஒருவரிடமிருந்து 12 பேர் கொண்ட கும்பல் வழிப்பறி செய்துவிட்டு, ஆரியங்காவு வழியாக தமிழகத்துக்குள் நுழைந்து, திருப்பூர் மாவட்டத்தில் தலைமறைவாகிவிட்டது.
இதுதொடர்பாக, கேரள மாநிலம் கரியகுளக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ்(32), திருக்குமார்(37) உட்பட 7 பேரை கைது செய்தனர். மேலும், சிலரை போலீஸார் தேடி வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aW9Ls8K
0 Comments