Crime

சென்னை: சென்னை திருவிக நகரில் வசித்து வருபவர் வினோத் (31). உடற்​ப​யிற்​சிக் கூடத்​தில் பயன்​படுத்​தும் உபகரணங்​களை வாங்​கி, விற்​கும் தொழில் செய்து வரு​கிறார். இவர் கடந்த 22-ம் தேதி இரவு, திருவிக நகர், ராம் நகர், 70 அடி சாலை​யில் அவரது காரில் சென்று கொண்​டிருந்​தார். அப்​போது அங்கு வேக​மாக வந்த ஓர் இருசக்கர வாக​னம் வினோத் காரின் பின்​புறம் மோதி​யது.

அதிர்ச்சி அடைந்த வினோத் காரை நிறுத்​தி, இருசக்கர வாக​னத்​தில் வந்​தவர்​களிடம் இது தொடர்​பாக கேட்​டுள்​ளார். அப்​போது, இரு தரப்​பினருக்​கும் இடையே தகராறு ஏற்​பட்​டது. இதையடுத்து இருசக்கர வாக​னத்​தில் வந்​தவர்​கள் அழைத்​த​தின்​பேரில், மேலும் ஒரு இருசக்கர வாக​னத்​தில் வந்த 2 இளைஞர்​கள் என மொத்​தம் 4 பேரும் சேர்ந்து வினோத்தை சரமாரி​யாகத் தாக்​கினர். பின்​னர், அங்​கிருந்து தப்​பிச் சென்​றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XGgryuh

Post a Comment

0 Comments