
சென்னை: சென்னை திருவிக நகரில் வசித்து வருபவர் வினோத் (31). உடற்பயிற்சிக் கூடத்தில் பயன்படுத்தும் உபகரணங்களை வாங்கி, விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 22-ம் தேதி இரவு, திருவிக நகர், ராம் நகர், 70 அடி சாலையில் அவரது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வேகமாக வந்த ஓர் இருசக்கர வாகனம் வினோத் காரின் பின்புறம் மோதியது.
அதிர்ச்சி அடைந்த வினோத் காரை நிறுத்தி, இருசக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் இது தொடர்பாக கேட்டுள்ளார். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அழைத்ததின்பேரில், மேலும் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் என மொத்தம் 4 பேரும் சேர்ந்து வினோத்தை சரமாரியாகத் தாக்கினர். பின்னர், அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XGgryuh
0 Comments