
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ரேஷன் அரிசி கடத்திய வேனை பிடிக்கச்சென்ற வட்டாட்சியர் பைக் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் செட்டிய தெருவிலிருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ராமநாதபுரம் குடிமைபொருள் வழங்கல் தனிப்படை வட்டாட்சியர் தமீம் ராஜாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வெள்ளிக்கிழமை அதிகாலை வருவாய் ஆய்வாளர் முத்துராமலிங்கத்தை உடன் அழைத்துக்கொண்டு அப்பகுதியில் பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7DPaizR
0 Comments