
உடுமலை: வனத் துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழந்த நிலையில், பழங்குடி மக்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள மேல் குருமலை மலைவாழ் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(45). விவசாயி. இவரது மனைவி பாண்டியம்மாள், மகள்கள் சிந்து, ராதிகா.
மாரிமுத்து உள்ளிட்ட 4 பேர் மீது சில ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் இருந்து கடந்த ஜூலை 29-ம் தேதி நீதிமன்றத்தால் மாரிமுத்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் மூணாறு செல்வதற்காக பேருந்தில் சென்ற மாரிமுத்துவை, சின்னாறு வனத் துறை சோதனைச்சாவடியில் இருந்த வனத் துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது மாரிமுத்துவிடம் புலியின் பல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iOGslzR
0 Comments