Crime

உடுமலை: வனத் துறை​யின​ரால் விசா​ரணைக்கு அழைத்து செல்​லப்​பட்​ட​வர் உயி​ரிழந்த நிலை​யில், பழங்​குடி மக்​கள் வனத்துறை அலு​வல​கத்தை முற்​றுகை​யிட்​டுப் போராட்​டம் நடத்​தினர். திருப்​பூர் மாவட்​டம் உடுமலை அரு​கே​யுள்ள மேல் குருமலை மலை​வாழ் கிராமத்தை சேர்ந்​தவர் மாரி​முத்​து(45). விவ​சா​யி. இவரது மனைவி பாண்​டி​யம்​மாள், மகள்​கள் சிந்​து, ராதிகா.

மாரி​முத்து உள்​ளிட்ட 4 பேர் மீது சில ஆண்​டு​களுக்கு முன்பு கஞ்சா கடத்​தல் உள்​ளிட்ட வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டன. அவற்றில் இருந்து கடந்த ஜூலை 29-ம் தேதி நீதி​மன்​றத்​தால் மாரி​முத்து விடுவிக்​கப்​பட்​டார். இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் மூணாறு செல்​வதற்​காக பேருந்தில் சென்ற மாரி​முத்​து​வை, சின்​னாறு வனத் துறை சோதனைச்​சாவடி​யில் இருந்த வனத் துறை​யினர் பிடித்து விசா​ரித்​துள்​ளனர். அப்​போது மாரி​முத்​து​விடம் புலி​யின் பல் இருந்​த​தாகக் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iOGslzR

Post a Comment

0 Comments