
சென்னை: சிறுதானிய உணவு சமைக்காத கோபத்தில் அடித்தபோது மனைவி உயிரிழந்த சம்பவத்தில் கணவர் மீது கொலையாகாத மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் அருள்மணி (45). சென்னை அரும்பாக்கம் ஜெய்நகர், 3-வது தெருவில் உள்ள பெண்கள் விடுதியில் வார்டனாக பணியாற்றி அங்கேயே தங்கிவந்தார்.
இவரது கணவர் ராதாகிருஷ்ணன் (50) திருவல்லிக்கேணியில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார். அருள்மணி மற்றும் அவரது கணவர் ராதாகிருஷ்ணன் இருவருக்குமே சர்க்கரை நோய் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FVRv6ID
0 Comments