
திருநெல்வேலி: ஐ.டி. ஊழியர் கவின் செல்வ கணேஷ் கொலை வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த 27-ம் தேதி நெல்லையில் கொலை செய்யப்பட்டார்.
இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை பாளையங்கோட்டை போலீஸார் கைது செய்தனர். சுர்ஜித்தின் பெற்றோரான உதவி ஆய்வாளர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவின் செல்வ கணேஷின் உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என அவரது உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OXqf83u
0 Comments