
சென்னை: போதைப்பொருள் வழக்கில் கைது செய்யாமல் இருக்க நடிகர், நடிகைகளிடம் சுமார் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் காவல் ஆய்வாளர், 2 எஸ்.ஐ.க்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பணம் கொடுத்த சினிமா பிரபலங்கள் யார் என விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த மே 22-ம் தேதி நடந்த மோதல் தொடர்பாக கைதான அதிமுக முன்னாள் பிரமுகர் பிரசாத் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான சேலம் சங்ககிரி பிரதீப்குமார் என்ற பிரடோ, கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போதைப் பொருள் வழக்கிலும் பிரசாத் கைது செய்யப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gjeGqzc
0 Comments