
நாமக்கல்: பள்ளிபாளையம் கிட்னி விற்பனை விவகாரம் தொடர்பாக திருச்செங்கோட்டில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் தொழிலாளர்களின் கிட்னியை இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டுகள் கிளம்பின. அண்மையில், பள்ளிபாளையத்தைச் சேர்ந்த பெண், தனது கிட்னியை பள்ளிபாளையம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த ஆனந்தன் என்ற இடைத்தரகர் மூலம் விற்பனை செய்த தகவல் வெளியானது.
இதுதொடர்பாக இடைத்தரகர் ஆனந்தன் மீது பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், கிட்னி விற்பனை விவகாரம் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின் பேரில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/J05OaR2
0 Comments