
சென்னை: டிராக்டர் தயாரிக்கும் வரைபடத்தை சட்ட விரோதமாக விற்பனை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த கணவன், மனைவி கைதாகினர். சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனத்துக்குச் சொந்தமான டிராக்டர் தயாரிக்கும் வரைபடங்கள் மற்றும் இதர ஆவணங்களைத் திருடி சிலர் போட்டி நிறுவனத்துக்கு விற்பனை செய்துவிட்டதாக சம்பந்தப்பட்ட நிறுவனம் சார்பில் 2005-ல் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், அந்த நிறுவனத்தில் பணி செய்த கணவன், மனைவியான தஞ்சாவூர் மாவட்டம், வீரியன் கோட்டையைச் சேர்ந்த ராஜா (55), அவரது மனைவி விஜயலட்சுமி (52) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின்னர் அவர்கள் தலைமறைவாகினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FPgtjJk
0 Comments