Crime

சென்னை: சென்னையில் பல்வேறு பகு​தி​களில் சைக்​கிள்​களை குறி​வைத்து திருடி வந்த நபர் கைது செய்​யப்​பட்​டார். அவரிடமிருந்து 40 சைக்​கிள்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. சென்னை கொடுங்​கையூர், ஜெய் பாலாஜி நகர் பகு​தி​யில் வசித்து வருபவர் எட்​வர்ட் (48). இவர் அவரது மகனின் சைக்​கிளை வழக்​கம் ​போல் கடந்த 18-ம் தேதி இரவு வீட்டு வளாகத்​தில் நிறுத்தியிருந்தார்.

அந்த சைக்​கிள் காணா​மல் போனது. இது தொடர்​பாக கொடுங்​கையூர் காவல் நிலை​யத்​தில் அவர் புகார் தெரி​வித்​தார். அதன்​படி, அக்​காவல் நிலைய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதே​போல், சென்​னை​யில் பல்​வேறு பகு​தி​களி​லும் சைக்​கிள்​கள் அடுத்​தடுத்து திருடு​போ​யின.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YpMku2t

Post a Comment

0 Comments