
சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் சைக்கிள்களை குறிவைத்து திருடி வந்த நபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 40 சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை கொடுங்கையூர், ஜெய் பாலாஜி நகர் பகுதியில் வசித்து வருபவர் எட்வர்ட் (48). இவர் அவரது மகனின் சைக்கிளை வழக்கம் போல் கடந்த 18-ம் தேதி இரவு வீட்டு வளாகத்தில் நிறுத்தியிருந்தார்.
அந்த சைக்கிள் காணாமல் போனது. இது தொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அவர் புகார் தெரிவித்தார். அதன்படி, அக்காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதேபோல், சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் சைக்கிள்கள் அடுத்தடுத்து திருடுபோயின.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YpMku2t
0 Comments