
சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலைய மேலாளர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் இரவு வெளிநாட்டிலிருந்து வந்த இ-மெயிலில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், எந்த நேரத்திலும் வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, விமான நிலைய இயக்குநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவசரகால பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/z8yJIb2
0 Comments