Crime

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடைபெற்ற இடஒதுக்கீட்டு ஆர்ப்பாட்டம் எதிரொலியாக, பாமகவினர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்காத திமுக அரசை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் விழுப்புரத்தில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாமகவினர், அரசு பேருந்துகள் மீது ஏறி ரகளையில் ஈடுபட்டனர். மேலும் சாலையின் குறுக்கே வேனை நிறுத்தி முழக்கமிட்டனர். பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன. இதனால், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EApZIeK

Post a Comment

0 Comments