Crime

கல்பாக்கம்: கூவத்​தூரை அடுத்த காத்​தான் கடை பகு​தி​யில் பெட்​ரோல் பங்க் உரிமை​யாளரை கடந்த ஜூன் 30-ம் தேதி நள்​ளிர​வில் வெட்டி கொலை செய்த சம்​பவத்​தில் 3 பேரை கைது செய்த போலீ​ஸார், தலைமறை​வாக உள்ள 5 பேரைத் தேடி வரு​கின்​றனர். செங்​கல்​பட்டு மாவட்​டம், கல்​பாக்​கத்தை அடுத்த கூவத்​தூர் பேட்டை பகு​தியை சேர்ந்த மோகன்​ராஜ்.

காத்​தான் கடை பகு​தி​யில் பெட்​ரோல் பங்க் நடத்தி வந்​தார். இந்​நிலை​யில், கடந்த ஜூன் 30-ம் தேதி நள்​ளிரவு பெட்​ரோல் பங்க்கை மூடி​விட்டு வீட்​டுக்கு சென்​ற​போது, மர்ம நபர்​கள் சிலர் அவரை வழிமறித்​து, கத்​தி​யால் வெட்டி விட்டு அங்​கிருந்து சென்​ற​தாக கூறப்​படு​கிறது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KA6q2RJ

Post a Comment

0 Comments