
கல்பாக்கம்: கூவத்தூரை அடுத்த காத்தான் கடை பகுதியில் பெட்ரோல் பங்க் உரிமையாளரை கடந்த ஜூன் 30-ம் தேதி நள்ளிரவில் வெட்டி கொலை செய்த சம்பவத்தில் 3 பேரை கைது செய்த போலீஸார், தலைமறைவாக உள்ள 5 பேரைத் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூர் பேட்டை பகுதியை சேர்ந்த மோகன்ராஜ்.
காத்தான் கடை பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு பெட்ரோல் பங்க்கை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து, கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KA6q2RJ
0 Comments