
மடப்புரம் கோயில் அருகே நகை திருட்டு நடந்ததாக புகார் தெரிவித்த நிகிதா மீது சில சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இது தொடர்பாக நிகிதா கூறியதாவது: நான் தலைமறைவானதாக கூறுகின்றனர். நான் வீட்டில்தான் இருக்கிறேன்.
விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். அஜித்குமார் இறந்ததில் நானும், எனது தாயாரும் வேதனையில் உள்ளோம். கோயிலில் காரை பார்க்கிங் செய்வதற்கு முன்பு எனது தாயாருக்கு சக்கர நாற்காலியை எடுத்து வந்த அஜித்குமார் ரூ.500 கேட்டார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7cbI1CU
0 Comments