
சென்னை: ஸ்டீல் நிறுவனத்துக்குள் நுழைந்து, துப்பாக்கியை காட்டி மிரட்டிய ஆந்திர தொழிலதிபர் சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை கிண்டி, கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கரேஸ்வரன் (54). அதே பகுதியில் உள்ள தனியார் ஸ்டீல் நிறுவனம் ஒன்றில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 4-ம் தேதி வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அவரது உரிமையாளர் சண்முகர் செல்போனில் தொடர்பு கொண்டு, நிறுவனத்துக்குள் புகுந்து இருவர் தகராறு செய்து கொண்டு இருக்கின்றனர். என்ன விவகாரம் என விசாரித்து, அவர்களை நிறுவனத்தை விட்டு வெளியே அனுப்பி வைக்கும்படி சங்கரேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8hyWSLD
0 Comments