Crime

சென்னை: ​போதைப்​பொருள் பயன்​படுத்​தி​ய​தாக கைதான நடிகர்​கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோ​ருக்கு ஜாமீன் கோரிய மனு மீது உயர் நீதி​மன்​றம் இன்று உத்​தரவு பிறப்​பிக்​க​வுள்​ளது. போதைப்​பொருள் பயன்​படுத்​தி​ய​தாக கடந்த மாதம் நடிகர்​கள் ஸ்ரீகாந்த் மற்​றும் கிருஷ்ணா ஆகியோரை நுங்​கம்​பாக்​கம் போலீ​ஸார் கைது செய்​தனர். இந்த வழக்​கில் தங்​களுக்கு ஜாமீன் கோரி இரு​வரும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​திருந்​தனர்.

இந்த மனு மீதான விசா​ரணை நீதிபதி எம்​.நிர்​மல்​கு​மார் முன்​பாக நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நடிகர் ஸ்ரீகாந்த் தரப்பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் ஜான் சத்​யன், போதைப்​பொருள் பயன்​படுத்​தி​ய​தாக கைதான பிரதீப்​கு​மார் என்​பவர் அளித்த ஒப்​புதல் வாக்​குமூலத்​தின் அடிப்​படை​யிலேயே ஸ்ரீகாந்தை கைது செய்​துள்​ளனர். அவரிட​மிருந்து எந்​தவொரு போதைப்​பொருளும் கைப்​பற்​றப்​பட​வில்லை என்​றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5thnEUC

Post a Comment

0 Comments