
சென்னை: போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு ஜாமீன் கோரிய மனு மீது உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தியதாக கடந்த மாதம் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோரை நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் ஸ்ரீகாந்த் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதான பிரதீப்குமார் என்பவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே ஸ்ரீகாந்தை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து எந்தவொரு போதைப்பொருளும் கைப்பற்றப்படவில்லை என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5thnEUC
0 Comments