
சென்னை: குரோம்பேட்டை, ஆதம் நகரைச் சேர்ந்தவர் பரந்தாமன் (43). இவர் நேற்று முன்தினம் பிற்பகல் வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள மதுபானக் கடை அருகே மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு கோடம்பாக்கம் வசந்தராஜ் (39), சாந்தகுமார் (37), சாலிகிராமம் விக்னேஸ்வரன் (28) ஆகிய 3 பேர் வந்தனர்.
வந்தவர்கள் பரந்தாமன் வைத்திருந்த மதுபானத்தை கேட்காமல் எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது. இதனால், பரந்தாமனுக்கும், 3 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மூவரும் பரந்தாமனை கையாலும், ஸ்பேனராலும் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ogYDBKx
0 Comments