
சென்னை: சென்னை அரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் கடந்த மாதம் 30-ம் தேதி அரும்பாக்கம், வல்லவன் ஓட்டல் அருகே கண்காணித்தனர். அப்போது, அங்கு சட்டவிரோதமாக மெத்தபெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த அந்தோணி ரூபன் (29), தீபக்ராஜ் (25) ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கடந்த 2-ம் தேதி இமானுவேல் ரோஹனும் (23), மறுநாள் வளசரவாக்கம் அரவிந்த் பாலாஜி (31), ஐயப்பந்தாங்கல் சுபாஷ் (30) ஆகிய மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். கடந்த 5-ம் தேதி கோடம்பாக்கம் அஜித் கண்ணன் (30) என்பவர் கைது செய்யப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vni25ac
0 Comments