
கோவை: கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், 18-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு தலைமறைவாக இருந்த உக்கடம் பிலால் நகரைச் சேர்ந்த டெய்லர் ராஜா(48), கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியில் பதுங்கி இருந்தபோது நேற்று முன்தினம் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைதான டெய்லர் ராஜா மீது சிறைத்துறை அதிகாரிகள் பூபாலன், ஜெயப்பிரகாஷ் மற்றும் நாகூரில் பெண் ஒருவரை கொலை செய்த வழக்கு ஆகியவையும் நிலுவையில் உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/H83q1ZL
0 Comments