
கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே டயர் வெடித்ததில் நிலை தடுமாறிய கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், குழந்தை உள்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த தேவனூர் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மாதவன் (44) ஆயுதப்படைக் காவலர்.
இவர் மனைவி மேனகா (22), அதே பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி (70), ராகவேந்திரன் (13), சங்கீதா (36), ஒரு வயது குழந்தை கவுசிகா, சுபா (55), சாந்தி (65), பூமாரி கிராமத்தைச் சேர்ந்த சரிதா (22), அவரது சகோதரர் மோகன் (13) ஆகியோர் நேற்று காரில் திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/w45EQlR
0 Comments