Crime

திருப்புவனம்: தனிப்படை போலீஸார் தாக்குதலில் உயிரிழந்த காவலாளி அஜித்குமார் வழக்கு தொடர்பாக திருப்புவனம் போலீஸார் நேற்று மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மடப்புரம் கோயிலில் ஒப்பந்த காவலாளியாகப் பணியாற்றியவர் அஜித்குமார்.

இவர் மீது கோயிலுக்கு வந்த திண்டுக்கல் அரசு கல்லூரி பேராசிரியர் நிகிதாவின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகை யைத் திருடியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அஜித்குமாரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை செய்தபோது தாக்கியதில் அவர் ஜூன் 28-ல் உயிரிழந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gLTyzk5

Post a Comment

0 Comments