
சென்னை: கோவை குண்டுவெடிப்பு உள்ளிட்ட வழக்குகளில் 30 ஆண்டுகளாக தேடப்பட்ட தீவிரவாதி அபுபக்கர் சித்திக் வெடிகுண்டுகள் தயாரிக்க பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. நாகை மாவட்டம், நாகூரைச் சேர்ந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக் கோவை தொடர் குண்டுவெடிப்பு, இந்து அமைப்புகளின் தலைவர்கள் கொலை உட்பட பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்தார்.
இந்நிலையில், ‘ஆபரேஷன் அறம்’ என்னும் சிறப்பு நடவடிக்கை மூலம் அபுபக்கர் சித்திக்கை ஆந்திர மாநிலம் அன்னமய மாவட்டம், கடப்பா அருகே பதுங்கி இருந்தபோது தமிழக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் அண்மையில் கைது செய்தனர். இதேபோல் மற்றொரு தீவிரவாதியான முகமது அலி என்ற ஷேக் மன்சூரையும் கைது செய்தனர். இவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டு கடந்த 1-ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Rrbh6zX
0 Comments