
கோவை பாலக்காடு சாலையில் நடைபெறும் தொடர் திருட்டு, கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்க, அங்கு கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தொழில் நகரமான கோவைக்கும், அண்டை மாநிலமான கேரளாவுக்கும் சமூக, வர்த்தகத் தொடர்புகள் அதிகம் உண்டு. கோவையில் இருந்தும், கோவை வழியாகவும் கேரளாவுக்கு ஏராளமான சரக்குகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. கோவையிலிருந்து கேரளாவுக்குச் செல்வதற்கு பல்வேறு வழித்தடங்கள் இருந்தாலும் பாலக்காடு சாலை முக்கியமானதாகும். இவ்வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் பேருந்துகளிலும், சொந்த வாகனங்களிலும் சென்று வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YIPi0MH
0 Comments