
உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேல்குருமலை மலைவாழ் கிராமத்தை சேர்ந்த பழங்குடி விவசாயி மாரிமுத்து (45). கேரள மாநிலம் மறையூரில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். கடந்த 30-ம் தேதி சின்னாறு வன சோதனைச்சாவடியில் இவரைப் பிடித்துச் சென்ற வனத் துறையினர், உடுமலை வனச் சரக அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இந்நிலையில், அங்கு கழிவறையில் தூக்கிட்ட நிலையில் மாரிமுத்து இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக வனத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jLSmRy3
0 Comments