Crime

திருநெல்வேலி: நெல்​லை​யில் ஐ.டி. ஊழியர் கவின் செல்​வகணேஷ் கொல்​லப்​பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது. இந்த வழக்​கில் கைது செய்​யப்​பட்ட சுர்​ஜித், குண்​டர் தடுப்பு சட்​டத்​தில் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். தூத்துக்குடி மாவட்​டம் ஆறு​முகமங்​கலம் பகு​தியைச் சேர்ந்த மென்​பொருள் பொறி​யாளர் கவின் செல்​வகணேஷ் கடந்த 27-ம் தேதி நெல்லை கேடிசி நகரில் படு​கொலை செய்​யப்​பட்​டார்.

இந்த சம்​பவத்​தில், இவர் காதலித்​த​தாக கூறப்​படும் பெண்​ணின் சகோ​தரர் சுர்​ஜித் என்​பவரை பாளை​யங்​கோட்டை போலீ​ஸார் கைது செய்​தனர். அவரது பெற்​றோ​ரான சிறப்பு காவல் படை உதவி ஆய்​வாளர்​கள் சரவணன், கிருஷ்ணகு​மாரி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டு, இரு​வரும் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளனர். இரு​வரை​யும் கைது செய்​தால் மட்​டுமே கவின் செல்​வகணேஷின் உடலை வாங்​கு​வோம் என உறவினர்​கள் தொடர்ந்து போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GKqtmkp

Post a Comment

0 Comments