
தூத்துக்குடி: சிபிஐ அதிகாரி என்று கூறி, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்திருப்பதாக மிரட்டி மூதாட்டியிடம் ரூ.50 லட்சம் பறித்த ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரை மர்ம நபர்கள் வாட்ஸ்அப் காலில் தொடர்பு கொண்டு, தாங்கள் சிபிஐ அதிகாரிகள் என்று கூறியுள்ளனர். பின்னர், “உங்கள் ஆதார் கார்டு அடிப்படையில் மும்பையில் வங்கிக் கணக்கு உள்ளது.
அதில், மனித கடத்தல் வழக்கில் ரூ.2 கோடி பண பரிமாற்றம் நடந்துள்ளது. இதுதொடர்பாக உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உங்களை கைது செய்யாமல் இருக்க ரூ.50 லட்சம் தரவேண்டும்” என்று வற்புறுத்தியுள்ளனர். இதனால் அச்சமடைந்த மூதாட்டி, ரூ.50 லட்சத்தை அவர்கள் கூறிய வங்கிக் கணக்குக்கு பணப் பரிமாற்றம் செய்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZDw1WbI
0 Comments