
திருவாரூர்: திருவாரூர் அருகேயுள்ள காரியாங்குடி அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த 11-ம் தேதி இரவு புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த குடிநீர் பைப்புகளை உடைத்தெறிந்ததுடன், சமையலறையில் இருந்த பாத்திரங்கள், பொருட்களை சேதப்படுத்தினர். பின்னர், அங்குள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவை கலந்துவிட்டு சென்றுவிட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவாரூர் தாலுகா போலீஸார் தனிப்படை அமைத்து, குற்றவாளிகளைத் தேடி வந்தனர். தொடர் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த வெல்டிங் கடை உரிமையாளர் விஜயராஜ்(36), உதவியாளர் செந்தில்(38), பெயின்டர் காளிதாஸ்(25) ஆகியோர் இந்த செயலில் ஈடுபட்டது தெரிந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ASQFwJ5
0 Comments