
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான 420 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு விமானத்தில் செல்லவிருந்த பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சென்னையை சேர்ந்த 2 பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தபோது, அவற்றில் 420 இந்திய நட்சத்திர ஆமைகள் இருந்தது தெரியவந்தது. இவ்வகை ஆமைகள் மலேசியாவில் ரூ.25 ஆயிரத்துக்கு விற்பனையாவதால், கடத்தப்பட இருந்த ஆமைகளின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AYaxjPC
0 Comments