
சென்னை: ரூ.1,000 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.5 கோடி கமிஷனாக பெற்று மோசடியில் ஈடுபட்ட வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீஸார் சென்னை வந்து கைது செய்து அழைத்துச் சென்றனர். டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தார்.
அவர், தனது நிறுவனத்தை விரிவுபடுத்த ரூ.1,000 கோடி கடன் பெறுவதற்கு முயற்சித்தார். இதையறிந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், தான் கடன் வாங்கித் தருவதாக அந்த தொழிலதிபரிடம் உறுதி அளித்துள்ளார். இதற்கான கமிஷன் தொகையாக ரூ.10 கோடியை முதலில் தரும்படி சீனிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், அந்த தொழிலதிபர் சீனிவாசனுக்கு முதல் கட்டமாக ரூ.5 கோடியை வழங்கியதாக கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qvkejYU
0 Comments