
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பள்ளி மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கூட்டுப் பாலியல் சீண்டல் செய்யப்பட்ட சம்பவத்தில் 8-ம் வகுப்பு மாணவர் உட்பட 3 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தம்பதியின் மகள் கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு முடித்துள்ளார். அவர் தற்போது 11-ம் வகுப்பு சேர்ந்துள்ளார். மாணவி, அதே ஊரைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவர், 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 2 பேர் ஆகியோர் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LQGJHZq
0 Comments