Crime

ஊத்தங்கரை அருகே கோயில் திருவிழாவின்போது, தனியார் பள்ளி வாகனம் மீது பட்டாசு வீசியதில் 6 மாணவர்கள் காயமடைந்தனர். மேலும், கல் வீசி தாக்கியதில் காவல் ஆய்வாளர் காயம் அடைந்தார்.

ஊத்தங்கரை வட்டம் கல்லாவி அருகே ரெட்டிப்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழா நேற்று நடந்தது. அப்போது, சுவாமி ஊர்வலத்தின்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் (40), தென்னரசு (30) ஆகியோர் அவ்வழியாக வந்த தனியார் பள்ளி வாகனம் மீது பட்டாசுகளை வீசினர். இதில் வாகனத்தின் கண்ணாடிகள் உடைந்ததில், ஆனந்தூரைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி பிரகதி (11), எல்கேஜி மாணவி தக்சனா (4), யுகேஜி மாணவர் தஸ்வின் (4) உள்ளிட்ட 6 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, ஆனந்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tT9hjiI

Post a Comment

0 Comments