Crime

சென்னை: போலீஸ் என கூறி செல்போன் கடை உரிமையாளரை தாக்கி வழிப்பறி ஈடுபட்டவர்களில் 3 பேரை பொது மக்கள்விரட்டிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது (63). வடக்கு கடற்கரை, ஈவ்னிங் பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 14-ம் தேதி இரவு, கடையில் வியாபாரம் செய்த பணத்தை பையில் எடுத்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் பாரிமுனை சந்திப்பு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த சிலர், தங்களை காவல் துறை சிறப்புப் படையினர் என கூறி அறிமுகம் செய்து கொண்டு, ’‘உங்கள் உடமைகளை சோதனை செய்ய வேண்டும்’ என கூறியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OVcXRw4

Post a Comment

0 Comments