Crime

ஓசூரில் விடுமுறை நாட்களில் தேசிய நெடுஞ்சாலையை இளைஞர்கள் ரீல்ஸ் தளமாக மாற்றி வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் வீலிங் சாகசம் மற்றும் பைக் ரேஸ் நடத்தி ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர். போதிய போக்குவரத்து போலீஸார் இல்லாததால் இச்சிக்கல் நீடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொழில் நகரான ஓசூர் வழியாக பெங்களூரு-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலை வழியாக தினசரி ஆயிரகணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், பொதுமக்களும், வாகனங்களும் செல்லும் பரபரப்பான தேசிய நெடுஞ்சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சில இளைஞர்கள் ரீல்ஸ் எடுக்கும் தளமாகப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, இளைஞர்கள் அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் வீலிங் சாகசம் செய்தும், பைக் ரேஸ் சென்றும் அதை பதிவு செய்து ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PmMtsIz

Post a Comment

0 Comments