
மதுரை திருமங்கலம் அடுத்த வி.சத்திரப்பட்டியில் காவல் நிலையத்தை சூறையாடிய ரவுடிகள், இரவுப் பணியில் இருந்த தலைமை காவலரை சரமாரியாக தாக்கினர். அவரை உள்ளே சிறை வைத்து காவல் நிலையத்தை பூட்டிவிட்டு தப்பினர். அவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபற்றி விசாரிக்க வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை போலீஸார் கைது செய்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு, மதுரை மாவட்டம் பேரையூர் அருகே கண்மாய் கரையில் தலை துண்டித்து கொல்லப்பட்ட நிலையில், இளைஞரின் உடல் கிடந்தது. இந்த கொலை வழக்கில், வி.சத்திரப்பட்டி பகுதியை சேர்ந்த பிரபாகரன் உள்ளிட்ட சிலர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட பிரபாகரன் தற்போது ஜாமீனில் உள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/T1p26PC
0 Comments