Crime

கடந்த 2006-ல் மூணாறில் கொல்லப்பட்ட சென்னை நபரின் கொலை வழக்கும், 19 ஆண்டுகளுக்கு பிறகு அதே பாணியில் மேகாலயாவில் கொல்லப்பட்ட இந்தூரை சேர்ந்த ராஜா ரகுவன்சியின் கொலை சம்பவமும் ஒரே பாணியில் நடத்தப்பட்ட ஒற்றுமையை கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.

2006-ல் நடந்தது என்ன? - கடந்த 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை - பம்மலை சேர்ந்த 30 வயதான சங்கருக்கு 24 வயதான வித்யாலட்சுமி என்று பெண்ணோடு திருமணம் நடந்தது. இருவரும் தேனிலவுக்காக கேரள மாநிலம் மூணாறு சென்றனர். ஜூன் 16-ம் தேதி சென்னையில் இருந்து ரயில் மூலம் திருச்சூர் சென்ற அவர்கள், மறுநாள் காலை குருவாயூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uMXvplZ

Post a Comment

0 Comments