
சென்னை: பொம்மை வியாபாரியை கடத்தி, வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் நிர்மல்சிங் (23). சென்னை ஏழுகிணறு பகுதியில் தங்கி, கோவிந்தப்பா தெருவில் உள்ள ஒரு பொம்மை கடையில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 10-ம் தேதி இரவு வேலை முடித்து, ஏழுகிணறு, வைத்தியநாதன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் நிர்மல்சிங்கை கத்தி முனையில் மிரட்டி, அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் பின்புறம் உள்ள ஒரு பழைய கட்டிடத்துக்கு கடத்திச் சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Xvqe5Z2
0 Comments