
சென்னை: எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் பணம் கையாடல் செய்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் கணக்காளராகவும், கண்காணிப்பாளராகவும் பணியாற்றிய ஜஹாருல்லா. காப்பாளர்களாக பணியாற்றிய ஜவஹர், ஜெயராஜ் மற்றும் உதவி இயக்குனராக பணியாற்றிய தேவதாஸ் ஆகியோர் கடந்த 2003 முதல் 2006 வரையிலான காலகட்டத்தில் அருங்காட்சியக நுழைவு கட்டணம், காட்சி அரங்க கட்டணம், ஊழியர்களுக்கான ஊதியம் என பல வகைகளில் ரூ. 5.44 லட்சத்தை கையாடல் செய்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dH3895Q
0 Comments